Complaint Post this in NEWS

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - Post this in NEWS
    Sudha on 2020-03-31 17:35:45

    கொரோனாவே

    எங்கள் நெஞ்சகங்களுக்குள் குடி கொண்டு
    இருக்கிறாயா இல்லையா என்ற
    பயத்திலேயே தூக்கத்தையும் சிரிப்பையும்
    தொலைத்தோம் உலக மக்கள் அனைவரும் மிக விரைவாக எதிர்
    காலத்தை நோக்கி சந்தோஷமாகவும்
    எதிர்பார்போடும் ஓடி கொண்டிருந்தோம்
    எங்களை பார்த்து பொறாமைப்பட்டு
    சீனா மக்களை பாதி அழித்து விட்டாய்.
    அங்கேயே உன் பயணத்தை முடித்திருக்கலாம். உனக்கு எவ்வளவு ‌‌. ஆக்ரோஷம் உலக நாடுகள் அனைத்து
    மக்களையும் துவம்சம் செய்து கொண்டு
    இருக்கிறாய். குடும்ப ஒற்றுமை நாட்டு
    ஒற்றுமை பார்த்து வியந்து எங்களைத்
    தனித் தீவுகளாய் பிரிக்க வந்தாயோ?
    சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியே
    விளையாடிக் கழித்திருக்கும் இப்பருவத்தில் கூண்டுக் கிளி போல
    வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம்
    பரீட்சைகள் இல்லாமல் போயின.
    மகளிரும் ஆடவர்களும் தங்களுக்கு
    உரிய வேலைகளை செய்து தன்
    குடும்பத்திற்காக சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த மக்களை நாலு
    சுவற்றுக்குள் அடைத்து நீ பல்கி பெருகி கொண்டு சுதந்திரமாய் உலாவி
    கொண்டுயிருக்கிறாய்.
    வயதான பெரியவர்கள் தங்கள்
    தனிமையை மறக்க நடை பயிற்ச்சியும்
    அண்டை அயலாரோடு பேசுவதை விட்டு
    வீட்டின் உள்ளே அடைய வைத்து
    நீ உல்லாசமாக திரிகிறாய். யாரிடம்
    நீ இருக்கிறாய். என்று விரைவாக
    அறிகுறி காட்டாமல் கண்ணுக்கு தெரியாத
    பேயாய் இருக்கிறாய். நாங்கள் அறிகுறிகளை உணரும் போது
    நுரையீரலை ஆக்கிரமித்து பின்
    அல்லல் பட வைக்கிறாய் மிகக் குறிகிய
    நாட்களில் இத்தனை உயிர்களை
    எடுத்துச் சென்று விட்டாய்கடிவாளமில்லாத
    கிருமியே, எங்களது நெருக்கத்தை
    குலைத்து வீட்டினுள்ளே தனித் தனி தீவு
    போல் வைத்திருக்கிறாய்.
    சாதாரண சளி இருமல் வந்தாலும் நீ
    தான் வந்து விட்டாயோ என்று
    பிதற்றுகிறோம். எந்தப் பொருளைத்
    தொட்டாலும் நீ வந்து விடுவாயோ
    என்ற அச்சம் அடிக்கடி கையை
    கழுவிக்கொண்டே இருக்கிறோம்
    எங்கள் கைகள் கூட உன்னைப்போல்
    ஈரத் தன்மையற்று உலர்ந்து
    இருக்கிறது. மனிதர்கள் பேயைக்
    கண்டதில்லை பல ரூபங்களில்
    கற்பனை செய்திருந்தோம் அந்தப்
    பேய் தான் நீயோ? இத்தனை
    உயிர்களை காவு வாங்கிய பிறகும்
    உன் கோர தாண்டவத்தை
    குறைக்கவில்லை. ஊரடங்கு சட்டம்
    போட்டு எங்களை வீட்டில் அடைத்த
    பின்னும் உன் ஆட்டம் அடங்கவில்லை.
    உன் சதி தெரியாமல் பல மக்கள்
    தன் சொந்த ஊர்களை நோக்கி கூட்டமாக
    பயணப் பட்டு கொண்டிருக்கின்றனர்.
    இவர்களிடம் உன் சம்பம் பழிக்கக்கூடாது
    என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
    மக்களின் கண்ணீரை அதிகமாக்காமல்
    கொரோனா நீ வந்த வேகத்திலேயே
    சென்று விடு இல்லையென்றால்
    பூமித்தாய் தன் சூரியனின் அக்னிச்
    சிறகுகளை விரித்து உன் குடும்பம்
    அனைத்தையும் அழித்து விடும்.
    இது உனக்கு எச்சரிக்கை.