Complaint Political members have cheated my property and money

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - Political members have cheated my property and money
    Sandhya on 2018-10-17 12:47:09

    Respected media,

    Please publish this and help me,

    If you also ignore me I shall do the suicide 

    immediately




    திராவிட கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
    என் பெயர் சந்தியா . நான் ஒரு கட்டிட ஒப்பந்த தாரர் . நான் ஆரம்ப நிலையில் வளர்ந்து வரும் ஒரு ஆர்வமுள்ள கட்டிட பெண் ஒப்பந்ததாரர் . வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர் . உழைத்து சம்பாதித்து மென்மேலும் வளர்ந்து என்னால் முயன்றவரை அடுத்தவருக்கு உதவவேண்டும் என்று நினைத்து இந்த எட்டு வருடங்களில் நான் சம்பாதித்தவை லட்சியம் என்ற வார்த்தையோடு சேர்த்து சில லட்சங்கள். என் வியர்வையில் சம்பாதித்த அந்த சில லட்சங்களுடன் கடன் என்ற சில லட்சங்களை நண்பர்கள் உறவினர்கள் என்று சேர்த்து நான் உயர்வடையும் நேரத்தில் நம்பிக்கை மோசம் என்ற பெயரில் இரு பிணம் கொத்தி கழுகுகள் ( தி.மு.க நபர் ஒருவர் அ.தி.மு.க. நபர் ஒருவர் ) அபகரித்துக்கொண்டுவிட்டார்கள். நம்பிக்கை மோசடி செய்தது இல்லாமல் நான் அதை திருப்பி கேட்க கூடாது என்று கொலை மிரட்டல் வேறு. இருவரிடமும் என்னுடைய பணத்தை மீட்க போராடியதில் எனக்கு உயர் ரத்த அழுத்தம் வந்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்து நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு எமனிடம் இருந்து மீண்டு வந்ததுதான் மிச்சம். இப்பொழுது நான் உயர் ரத்த அழுத்தம் சம்பந்தமான சிகிச்சை பெற்று வருகிறேன். நான் திருமணம் ஆகாத தாய் தந்தை இல்லாத ஒரு அனாதை. அன்றாட வாழ்க்கையை நான் எப்படி இந்த மூன்று வருடங்களை சமாளித்திருப்பேன் என்று பாருங்கள். அடுத்து இவர்களை பற்றி சொல்கிறேன்.

    R.k சந்திரா மோகன் , வழக்கறிஞர் , பார் கவுன்சில் உறுப்பினராக இருந்தவர். இவர் தி.மு.க. வை சேர்ந்தவர். தி.மு.க.வில் நிறைய செல்வாக்கு உடையவர். இவர் கடந்த 2015 செப்டம்பர் மாதம் தன்னுடைய சுய லாபத்திற்காக தி.நகரில் உள்ள தன்னுடைய இடத்தை கட்டிடம் கட்டுவதற்காக என்னிடம் பத்து லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு என்னை கட்டுமான பணியும் செய்ய வைத்து முடியும் தருவாயில் என்னை அவர்களுடைய அடி ஆட்களை வைத்து ( அடியாட்களும் வழக்கறிஞர்கள்) பிடுங்கிக்கொண்டார் . அவர் ஏற்கனவே பத்து லட்சத்திற்கு ஒப்பந்தம் போட மாட்டேன் என்று சொல்லி ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கையொப்பம் இட்டார். நானும் நம்பிக்கையின் பெயரில் பெற்றுக்கொண்டேன். பின்புதான் தெரியும் அவர் ஏமாற்றுகிறார் என்று. இதற்கு தி.நகர் காவல் துறை அதிகாரிகளும் பார் கவுன்சில் உறுப்பினர்களும் உடந்தையாக செயல்பட்டார்கள். நான் காவல் துறையிடம் கேட்டதற்கு அந்த காவல் ஆய்வாளர் இரண்டு லட்சம் பணம் கேட்கிறார். பார் கவுன்சில் சென்றால் அவர்கள் ஐந்து லட்சம் கேட்கிறார்கள். அதோடு இல்லாமல் என்னை கொலை செய்து விடுவேன் என்றும் நான் இங்கிருக்க கூடாது என்றும் மிரட்டி வருகிறார். இதற்கு எல்லாமே ஆதாரம் உள்ளது.

    2.D.Devasitham பஞ்சாயத் தலைவர் தாழம்பூர் ஊராட்சி. அ.தி.மு.க வை சேர்ந்தவர். இவரும் வழக்கறிஞர். ( he is lions club member also)அந்த ஊரில் ஒரு நிலத்திற்கான பொய் ஒப்பந்தம் போட்டு பணம் இருபத்தைந்து லட்சம் பணம் மோசடி செய்தார். திருப்பி கேட்டதற்கு ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விட்டு இருக்கார். எல்லா ஆவணங்களும் கையில் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்கிறார்கள். இந்த இருவரின் செயல்களுக்கும் இந்த திராவிட இயக்கத்தை கட்டி காத்துக்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் என்ன செய்ய போகிறார்கள். காவல் துறையை கட்டி காக்கும் டிஜிபி ஐஜி கமிஷனர் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள். பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்ன செய்ய போகிறார்கள்.
    என்னுடைய நம்பிக்கை என்னும் முட்டாள் தனத்திற்கு மக்கள் என்ன சொல்ல போகிறார்கள். என்னுடைய நிலையை நினைத்து மக்களாகிய நீங்கள் யாரும் பரிதாப பட வேண்டாம். என்னை திட்டுங்கள் அப்பொழுது தான் உடன்பிறப்பாக இருந்தாலும் வாயும் வயிறும் ஒன்றல்ல என்பது நன்றாக புரிய வேண்டும். மனிதர்கள் இருக்கும் நாட்டிலும் சில நயவஞ்சக நரிகள் மிருகங்கள் இருக்கத்தான் செய்யும் என்று. வாழ்க்கையில் எப்பொழுதும் இவர்களை வைத்துதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு அறிய முடியும்.


    Thanks and regards;

    Sandhya

    8610902919, 7708653920



    Sent from my Samsung Galaxy smartphone.